No results found

    நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு விழா


    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில் 2023-ல் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில் 720 மதிப்பெண் களுக்கு 661 மதிப்பெண் பெற்று அகாடமியில் முதல் இடத்தை பிடித்த மாணவர் வண்ணநிலவன், 635 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர் பாசில், 593 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்கள் ஹேமந்த் மற்றும் பிரமோத் ஆகியோரை வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் பாராட்டி, பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி, வாழ்த்தினார். இது குறித்து அவர் கூறுகையில், வேளாங்கண்ணி அகாடமி யில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களின் 100 மாணவர்களுக்கு மேல் அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர் என்றார். இந்த நிகழ்ச்சியில், பொறுப்பாளர் யுவராஜ், ஒருங்கிணைப்பாளர் வேமுலா சந்திரசேகர் மற்றும் பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال